×

பல் துலக்கும் போது தவறுதலாக பிரஷை விழுங்கிய நபர்.. என்ன ஆச்சுன்னு நீங்களே பாருங்க!

அருணாச்சல பிரதேசம் அருகே ஒரு நபர் பல் துலக்கும் போது பிரஷை தவறுதலாக விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம் ரோயிங் லோவர் திபாங் பள்ளத்தாக்கில் வசித்து வரும் 39 வயதான நபர் ஒருவர் காலை வழக்கம் போல பல்துலக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, தொண்டையின் பின்புறத்தை பிரஷை வைத்து அவர் சுத்தம் செய்ய முயன்ற போது தவறுதலாக 19 செ.மீ நீளம் கொண்ட பிரஷை விழுங்கியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவிக்க, உடனடியாக
 

அருணாச்சல பிரதேசம் அருகே ஒரு நபர் பல் துலக்கும் போது பிரஷை தவறுதலாக விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் ரோயிங் லோவர் திபாங் பள்ளத்தாக்கில் வசித்து வரும் 39 வயதான நபர் ஒருவர் காலை வழக்கம் போல பல்துலக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, தொண்டையின் பின்புறத்தை பிரஷை வைத்து அவர் சுத்தம் செய்ய முயன்ற போது தவறுதலாக 19 செ.மீ நீளம் கொண்ட பிரஷை விழுங்கியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவிக்க, உடனடியாக பேக்கின் பெர்டின் பொதுமருத்துவமனை அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்த போது, பிரஷ் போன்ற ஏதும் இருப்பதாக தெரியவில்லையாம். இதனையடுத்து, தொண்டை வழியே சென்ற பிரஷ் வயிற்றுக்குள் சென்றிருக்கும் என யூகித்த மருத்துவர்கள் அவருக்கு லேபரோடமி பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி, சுமார் 30-40 நிமிட அறுவை சிகிச்சை மூலமாக அடிவயிற்றில் இருந்த பிரஷை வெளியே எடுத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த நபருக்கு அசெளகரியத்தை தவிர பெரிதாக வலி ஏதும் இருக்கவில்லை என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை பிறகு அந்த நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.