×

திடீரென வந்த காந்த சக்தி.. உடம்பில் ஒட்டிக்கொள்ளும் இரும்பு : தடுப்பூசி தான் காரணமா?

மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதால் காந்த சக்தி வந்ததாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் தலைவலி, காய்ச்சல் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சிவாஜி சவுக்கில் வசித்து வரும் அரவிந்த் சோனர் என்பவருக்கு காந்த சக்தி வந்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்
 

மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதால் காந்த சக்தி வந்ததாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் தலைவலி, காய்ச்சல் வருவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சிவாஜி சவுக்கில் வசித்து வரும் அரவிந்த் சோனர் என்பவருக்கு காந்த சக்தி வந்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவரது உடலில் அனைத்து இரும்பு பொருட்களும் ஒட்டிக்கொண்டதாம். தனக்கு திடீரென காந்த சக்தி வந்ததை உணர்ந்த அரவிந்த், பதறிப்போய் மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவர்களுக்கும் இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை சோதனை செய்து முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த காந்த சக்தி பற்றி தெரிவிக்க முடியும் என நாசிக்கை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டதால் தான் தனக்கு காந்த சக்தி வந்ததாக அரவிந்த் குற்றஞ்சாட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த மும்பை மருத்துவகே கல்லூரி டீன், ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் உடலில் காந்த சக்தி ஏற்படுவதற்கும் சம்பந்தம் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் இதுபோன்ற ஏதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.