×

உ.பி. அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் அலட்சியம்.. பெண்ணின் சடலத்தை நாய் கடித்து தின்ற அவலம்

உத்தர பிரதேசத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒன்றில் மருத்துவமனை பணியாளர்களின் அலட்சியத்தால் பெண்ணின் சடலத்தை நாய் கடித்து தின்ற அவலம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு விபத்தில் மரணம் அடைந்த ஒரு பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. அந்த பெண்ணின் சடலத்தை மருத்துவ பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு இல்லாத ஒரு அறையின் ஒரத்தில் ஸ்ட்ரெச்சரில் வைத்து விட்டு சென்று விட்டனர். பல மணி
 

உத்தர பிரதேசத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒன்றில் மருத்துவமனை பணியாளர்களின் அலட்சியத்தால் பெண்ணின் சடலத்தை நாய் கடித்து தின்ற அவலம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு விபத்தில் மரணம் அடைந்த ஒரு பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. அந்த பெண்ணின் சடலத்தை மருத்துவ பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு இல்லாத ஒரு அறையின் ஒரத்தில் ஸ்ட்ரெச்சரில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

நாய்கள்

பல மணி நேரமாக அந்த உடலை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே விபத்தில் இறந்துபோன பெண்ணின் சடலத்தை ஒரு நாய் கடித்து தின்றுள்ளது. இதை பார்த்த ஒருவர் அதனை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாக பிறகுதான் சம்பல் மாவட்ட மருத்துவமனையின் பணியாளர்களின் அலட்சிய போக்கு வெளியே தெரிந்தது.

சடலத்தை சாப்பிடும் நாய்

இறந்த சிறுமியின் தந்தை இது குறித்து கூறுகையில், விபத்தில் இறந்த எனது மகளின் உடல் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. எனது மகளின் உடல் கவனிக்கப்படாமல் கிடந்ததால் நாய்கள் உடலை கடித்து தின்றன இது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்தார். அதேவேளையில் அந்த மருத்துவமனையின் சி.எம்.ஒ. அமிதா சிங் கூறுகையில், அந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.