×

உத்தரகாண்டில் உள்ள பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் அனைத்து சின்னங்களும் பெயர் மாற்றம்.. முதல்வர் புஷ்கர் சிங் தாமி
 

 

உத்தரகாண்டில் உள்ள பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் அனைத்து சின்னங்களும் பெயர் மாற்றம் செய்ய அனைத்து மாநில துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. உத்தரகாண்டில் உள்ள பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் அனைத்து சின்னங்களும் பெயர் மாற்றம் செய்ய அனைத்து மாநில துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து நாட்டில் அடிமைத்தனத்தின் பழைய சின்னங்கள் மாற்றப்படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன. அதேபோல், உத்தரகாண்டில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளையும் இது போன்ற சின்னங்கள் குறித்த அறிக்கையை தொகுத்து, விரைவில் அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

மாநிலத்தில் உள்ள அனைத்து பிரிட்டிஷ் அடிமைத்தனத்தின் இடங்களின் பெயர்களையும் மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ், புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான பழைய ராஜபாதை புனரமைக்கப்பட்டு, கடமை பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.