×

பச்சிளம் குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்...கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

 

கேரளாவில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திரூரிலுள்ள விவசாய நிலம் ஒன்றில், சில தெருநாய்கள் சேர்ந்து ஒரு சடலத்தை கடித்துக் கொண்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அது என்னவென்று அருகில் சென்று பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த தெரு நாய்கள் ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை கடித்து குதறிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த நாய்களை அங்கிருந்து துறத்திய பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடனடியாக அந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விவசாய நிலத்தில் குழந்தையின் சடலத்தை வீசிச் சென்றது யார்? உயிருடன் குழந்தை வீசப்பட்ட நிலையில், நாய்கள் கடித்துக் கொன்றதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய்கள் கடித்து குதறிய நிலையில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.