பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பிணி பசு உயிரிழப்பு - கொடூர இளைஞன் பிடிபட்டான்
கர்ப்பிணிப் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததில் அந்த பசு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. அந்தக் கொடூர சைக்கோ இளைஞனே போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் நம் காண தொகுதியில் வடக்கு சந்தன் பிடி பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா. தனது தொழில் பசுவை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பசு கர்ப்பிணியாக இருந்திருக்கிறது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரத்யூத் என்கிற இளைஞர் கால்நடைகளுடன் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆர்த்தியின் தொழுவத்திற்குள் நுழைந்து இருக்கிறார் அந்த இளைஞர். அங்கு இருந்த கர்ப்பிணிப் பசுவை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நள்ளிரவில் யாரும் இல்லாதது அந்த இளைஞர் ரொம்ப வசதியாக போய்விட்டது. அந்த பசுவை ரொம்பவே துன்புறுத்தி இருக்கிறார். இதில் அந்த பசுவுக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது .
ரத்தப்போக்கு அதிகரித்த தால் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. அதிகாலையில் இதைபார்த்த ஆர்த்தியும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் . பசுவின் பெண்ணுறுப்பில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததால் அவர்களுக்கு பக்கத்து வீட்டு இளைஞர் பிரத்யுத் மீதுதான் சந்தேகம் வந்திருக்கிறது.
அந்த இளைஞர் தான் கால்நடைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் பழக்கம் வைத்திருந்திருக்கிறார் என்பதை அறிந்திருந்தனர். இதனால் அவர்தான் பசுவை கொடுமை செய்திருக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததும் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த இளைஞர் ஏற்கனவே ஆடு, நாய் போன்ற கால்நடைகளுடன் உடலுறவு மேற்கொண்ட புகார் இருந்து வந்துள்ளது.