பாலியல் புகாரில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் மீது எப்.ஐ.ஆர் போட உத்தரவு
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் ஷானவாஸ் ஹூசேன். அவர் மீது கடந்த 2018ம் ஆண்டில் புதுடெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் மீது எப்.ஐ.ஆட். பதிவு செய்யாமல் இருந்ததால், அந்த பெண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதி, ஷாநவாஸ் ஹூசேன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஷாநவாஸ் ஹூசேன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளூபடி செய்தது.
அதன் பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஷாநவாஸ் ஜூசேன். வழக்கின் விசாரணையை அடுத்து கடந்த 2018ல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், புதுடெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை நேற்று முன் தின விசாரித்தது. அப்போது முன்னர் பிறப்பித்திருந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்தது. ஷாநவாஸ் ஹூசேன் மீது உடனே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
எந்த ஒரு வழக்கிலும் முதலில் எஃப் ஐ ஆர் பதிவு செய்த பின்னரே விசாரணை நடத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமலேயே போலீசார் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். அதனால் உடனடியாக இந்த பாலியல் பலாத்கார புகார் மீது புதுடெல்லி போலீசார் உடனே எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை அடுத்து ஷாநவாஸ் ஹூசேன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.