×

#BREAKING குடியரசு துணைத் தலைவராக பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர் தேர்வ

 

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். 

நாட்டின் 14வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தேர்வாகியுள்ளார்.  குடியரசுத் துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்கும் விழா வரும் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது. 500க்கும் அதிக வாக்குகளை பெற்று ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பாக ஜக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் களமிறங்கினர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.