×

அதிகரிக்கும் கொரோனா -  உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,201 ஆக உயர்வு!!

 

இந்தியாவில் 18,096  பேர்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,858  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம்    2,827 பேருக்கும், நேற்று 2,841  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்து 112   ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு11  பேர்  பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை   5,24,201 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 3,355 பேர் குணமான நிலையில் இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 76,815 ஆக உயர்ந்துள்ளது.  

தற்போது வரை இந்தியாவில் பேர் 18,096  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 15,04,34பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை  191.15கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.