×

புதிதாக வாங்கிய காரில் பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் நேர்ந்த கோர விபத்து

 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில்  புதிதாக வாங்கப்பட்ட காருக்கு பூஜை போட கொண்டு வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பர்வதகிரி மண்டலத்தில் உள்ள அன்னரம் தர்காவில் புதியதாக வாங்கப்பட்ட காருக்கு பூஜை செய்வதற்காக ரபீக் என்பவர் காரை ஓட்டி வந்தார். புதிதாக வாங்கிய காருக்கு தர்காவில் பூஜையை முடித்துவிட்டு  கூட்டத்தின் மத்தியில் ஓட்டிச் சென்றார். 

அப்போது கூட்டத்தில்  பிரேக் போடுவதற்குப் பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியதால் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் பல வாகனங்கள்  மீது கார் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், நந்தினி என்ற பெண் ஆபத்தான நிலையில் உள்ளார்.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் ஐபிசி பிரிவு 337 இன் கீழ் வழக்கு பதிவு செய்து ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.