×

பலான படம் பார்த்த தாத்தா – பத்து வயது சிறுமியை பார்த்தார் -அடுத்து நடந்த கொடுமை

ஒரு 68 வயதான முதியவர் அவர் வீட்டினருகே வசித்த 10 வயதான சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 68 வயது நபர் தனியாக வசித்து வந்தார் .அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் கட்டும் பகுதியில் பல தொழிலாளர்கள் தங்கியிருப்பதையும் ,அவர்களுக்கு ஒரு 10 வயதான மகள் இருப்பதையும் அடிக்கடி பார்த்து வந்தார் .அதனால் கடந்த திங்கள் கிழமையன்று அந்த பெரியவர் தன்னுடைய வீட்டில் சில பலான
 


ஒரு 68 வயதான முதியவர் அவர் வீட்டினருகே வசித்த 10 வயதான சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்


மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 68 வயது நபர் தனியாக வசித்து வந்தார் .அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் கட்டும் பகுதியில் பல தொழிலாளர்கள் தங்கியிருப்பதையும் ,அவர்களுக்கு ஒரு 10 வயதான மகள் இருப்பதையும் அடிக்கடி பார்த்து வந்தார் .
அதனால் கடந்த திங்கள் கிழமையன்று அந்த பெரியவர் தன்னுடைய வீட்டில் சில பலான படங்களை பார்த்துள்ளார் .அதன் பிறகு அவர் ஒரு சாக்லேட் வாங்கி கொண்டு அந்த சிறுமி வசிக்கும் குடியிருப்புக்குள் வந்தார் .பிறகு சிறிது நேரம் கழித்து அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக கூறி அந்த கட்டிடத்தின் ஒரு தனிமையான பகுதிக்கு கூட்டி சென்றார் .பிறகு அவரை நம்பி சாக்லேட் வாங்க வந்த அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்து விட்டு,பின்னர் இந்த சம்பவத்தை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்று மிரட்டி விட்டு ஓடிவிட்டார் .பிறகு அந்த சிறுமியின் மாமா அந்த பெண் தனியாக அழுது கொண்டிருப்பதை பார்த்து விசாரித்த போது அந்த சிறுமி அந்த தாத்தாவால் தனக்கு நடந்த கொடுமையை விவரித்தார் .
அதன் பிறகு இந்த விஷயம் அந்த சிறுமியின் தாயாரிடம் கூறப்பட்டது .பிறகு அவர் அந்த நபர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .பிறகு போலீசார் அந்த பெரியவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையிலடைத்தனர்.