×

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 6 பயங்கரவாதிகள் என்கவுண்டர்!

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பயங்கரவாத செயல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்று மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் உள்ள சோஃபியான் மாவட்டம்
 

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பயங்கரவாத செயல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்று மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது.


அதைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் உள்ள சோஃபியான் மாவட்டம் அம்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை சுற்றிவளைத்தனர். பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் யாத்ரிகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.