×

‘பில்டிங் கட்டாமல் பெண்ணை கட்ட நினைத்தார்’ -மேஸ்திரி மகளை கட்டிக்க ஆசைப்பட்ட கட்டிட காண்ட்ராக்டர் – மேஸ்திரியை கொலை செய்தார்..

டெல்லியில் நரேலா பகுதியில் வசிக்கும் 55 வயதான அர்ஜுன்சிங் ஒரு கட்டிட காண்ட்ராக்டர் .இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .இவர் அந்த பகுதிதர யில் ஒரு பங்களா ஒன்று கட்டி வருகிறார் .அந்த கட்டிடம் கட்டும் பணியில் அவரிடம் பல கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் .அதில் ஒரு மேஸ்திரியின் 13 வயது மகள் மீது அர்ஜுன் சிங்கிற்கு ஒரு கண் .இதனால் அந்த மேஸ்திரியிடம் அர்ஜுன் சில நாட்களுக்கு முன்னாள் அவரின் 13
 

டெல்லியில் நரேலா பகுதியில் வசிக்கும் 55 வயதான அர்ஜுன்சிங் ஒரு கட்டிட காண்ட்ராக்டர் .இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் .இவர் அந்த பகுதிதர யில் ஒரு பங்களா ஒன்று கட்டி வருகிறார் .அந்த கட்டிடம் கட்டும் பணியில் அவரிடம் பல கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் .அதில் ஒரு மேஸ்திரியின் 13 வயது மகள் மீது அர்ஜுன் சிங்கிற்கு ஒரு கண் .இதனால் அந்த மேஸ்திரியிடம் அர்ஜுன் சில நாட்களுக்கு முன்னாள் அவரின் 13 வயது மகளை திருமணம் செய்ய கேட்டார் .அதற்கு அந்த மேஸ்திரி அவரை திட்டி சண்டை போட்டு அனுப்பிவிட்டார் .


இதனால் அர்ஜுன் மனம் தளராமல் தன்னிடம் வேலை பார்க்கும் இன்னொரு மேஸ்திரியிடம் சொல்லி ,அந்த பெண்ணை தனக்கு கட்டிக்கொடுக்க சிபாரிசு செய்யும்படி கேட்டார் .அதற்கு சரியென்று கூறிய மேஸ்திரிக்கு அர்ஜுன் நிறைய பணஉதவிகள் செய்துள்ளார் .
பிறகு அந்த மேஸ்திரி அந்த 13 வயது பெண்ணின் தந்தையிடம் இது பற்றி பேசியபோது அவர் சம்மதிக்கவில்லை .இதனால் அந்த மேஸ்திரி அர்ஜுன் சிங்கிடம் சென்று உங்கள் வயது என்ன அந்த பெண்ணின் வயது என்ன அதனால் இந்த திட்டத்தை கைவிட்டுவிடுங்கள் என்று கூறினார் .
இதனால் கடுப்பான அர்ஜுன், அந்த மேஸ்திரியை அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கியதால் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார் .
பிறகு இந்த விஷயம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு ,அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மேஸ்திரியை கொன்ற அர்ஜுன் சிங்கை செவ்வாய்க்கிழமை காலையில் கைது செய்தனர் .