×

ஒரே நாளில் 51 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

2020 மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் வீசத் தொடங்கியது. உடனே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். மாறாக நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர். புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்திகளே. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் குணம் பெற்றுள்ளனர். 51,225 பேர் குணம்
 

2020 மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் வீசத் தொடங்கியது. உடனே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். மாறாக நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்திகளே. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் குணம் பெற்றுள்ளனர்.

51,225 பேர் குணம் பெற்று வீடு திரும்பியதை அடுத்து, இந்தியாவில் கோவிட்-19 நோயில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,45,629 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் குணம் அடைவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவை எட்டியுள்ளதை அடுத்து, கோவிட் பாதிப்பில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 65.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இன்னும் அதிகமான கோவிட் 19 நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்புகின்றனர்.

முன்கள சுகாதார அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களின் தன்னலமற்ற தியாகம், நாடு முழுக்க கோவிட் -19 பாதிப்புக்கு எதிராகப் போராடி வருபவர்களின் முயற்சிகள் காரணமாக, இதில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

குணம் பெறுபவர்கள் மற்றும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2020 ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் முறையாக, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது. அப்போது அந்த இடைவெளி 1,573 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி இந்த இடைவெளி 5,77,899  ஆக உள்ளது. தற்போது கோவிட் நோய் பாதிப்புக்காக 5,67,730 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 32.43 சதவீதம். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

சிகிச்சை மேலாண்மை நடைமுறைகளை வெற்றிகரமாகவும், ஒருங்கிணைந்தும் அமல்படுத்தியதாலும், குணம் அடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மரண விகிதம் குறைந்து வருகிறது. இந்தத் தொற்று நோயால் மரணம் அடைவோர் சதவீதம் 2.13 சதவீதம் என்ற நிலையில், உலக அளவில் இந்தியாவில் தான் குறைந்தபட்சமாக உள்ளது.