×

‘ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு’ :உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50 சதவீத மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு தர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50 சதவீத மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும்
 

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50 சதவீத மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு தர கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50 சதவீத மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த மனு மீதான தீர்ப்பில்,அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு இதை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

ஆனால் இந்த ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு மற்றும் அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் இதுகுறித்து பதிலளித்த போது, தமிழக ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வாய்ப்பில்லை என பதிலளித்தனர்.

தமிழக ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டு நடைமுறைப்படுத்துவது எப்படி? என எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் அதிமுகவுக்கு உத்தரவிட்டனர். இதற்கான விளக்கம் கடந்த 22 ஆம் தேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.