×

தனியாக விமானத்தில் பயணித்து பெங்களூரு வந்த 5 வயது சிறுவன்

பெங்களூரு: 5 வயது சிறுவன் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக விமானத்தில் பயணித்து வந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது. அதன்படி சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை தொடங்கியது. விமான பயணச் சீட்டுகள் அனைத்தையும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து பெற முடியும். Karnataka:Passengers leave from Kempegowda
 

பெங்களூரு: 5 வயது சிறுவன் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு தனியாக விமானத்தில் பயணித்து வந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது. அதன்படி சென்னை, டெல்லி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமான சேவை தொடங்கியது. விமான பயணச் சீட்டுகள் அனைத்தையும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து பெற முடியும்.

இதுகுறித்து அந்த சிறுவனின் தாய் கூறுகையில், “எனது 5 வயது மகன் விஹான் சர்மா டெல்லியில் இருந்து தனியாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளார்” என்றார்.