×

4 வயது சிறுமியை பார்த்ததும் குரூரமான யோசித்த 35 வயது நபர்… நிர்வாணமாய் ஓட விட்ட பொதுமக்கள்!

பணம் வசூலிக்க சென்ற வீட்டிலிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் உலகம் முழுவதும் நாடுகள், மாநிலங்கள் வித்தியாசமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பார்டியை சேர்ந்தவர் 35 வயதான ஜவஹர் வைத்யா. கூட்டுறவு சங்க வங்கியின் தினசரி பண வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பணம் வசூலிக்க சென்ற வீட்டிலிருந்த
 

பணம் வசூலிக்க சென்ற வீட்டிலிருந்த  4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்றுள்ளார்

உலகம் முழுவதும் நாடுகள், மாநிலங்கள் வித்தியாசமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பார்டியை சேர்ந்தவர் 35 வயதான ஜவஹர் வைத்யா. கூட்டுறவு சங்க வங்கியின் தினசரி பண வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை பணம் வசூலிக்க சென்ற வீட்டிலிருந்த  4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்றுள்ளார். அப்போது அங்கு சிறுமியின் தாய் வந்துவிடவே அவரை பார்த்து கத்தி கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் திரண்டுள்ளனர்.  இதையடுத்து ஜவஹர் வைத்யாவை பொதுமக்கள் அடித்து துவைத்துள்ளனர்.  இதை தொடர்ந்து அவரை  நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி இழுத்துச் சென்று போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜவஹர் வைத்யாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.