×

‘4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’ உறவினர்களே துன்புறுத்திய கொடூரம்!

உ.பி மாநிலம் ஹத்ராஸில் 4 வயது சிறுமி உறவினர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹத்ராஸில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண், கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்தார். அவரது உடல் பெற்றோர்களின் சம்மதம் இன்றி, இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. பெற்ற மகளின் முகத்தை கூட பார்க்க விடமால், உடல் தகனம் செய்யப்பட்ட இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரச்னையை தவிர்ப்பதற்காகவே பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாக
 

உ.பி மாநிலம் ஹத்ராஸில் 4 வயது சிறுமி உறவினர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹத்ராஸில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண், கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்தார். அவரது உடல் பெற்றோர்களின் சம்மதம் இன்றி, இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. பெற்ற மகளின் முகத்தை கூட பார்க்க விடமால், உடல் தகனம் செய்யப்பட்ட இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரச்னையை தவிர்ப்பதற்காகவே பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது.

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது ஹத்ராஸ், சஸ்னி பகுதியில் வசித்து வந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் உறவினர்களே பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.