×

ராஜீவ் காந்தி பவனில் உள்ள இந்திய விமான நிலைய அலுவலகத்துக்கு சீல்

டெல்லி ராஜீவ் காந்தி பவனில் உள்ள இந்திய விமான நிலைய அலுவலகத்துக்கு வரும் 4 ஆம் தேதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அதிகாரிகளுடன் பழகியவர்கள், பேசியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன் கடந்த மாதத்தில் டெல்லி ராஜீவ் காந்தி பவனில் இருக்கும், விமான அமைச்சகத்தில் செயல்படும் நிதி ஆயோக் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து,
 

டெல்லி ராஜீவ் காந்தி பவனில் உள்ள இந்திய விமான நிலைய அலுவலகத்துக்கு வரும் 4 ஆம் தேதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அதிகாரிகளுடன் பழகியவர்கள், பேசியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன் கடந்த மாதத்தில் டெல்லி ராஜீவ் காந்தி பவனில் இருக்கும், விமான அமைச்சகத்தில் செயல்படும் நிதி ஆயோக் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோன்று சிஆர்பிஎப் தலைமை அலுவலகம், பிஎஸ்எப் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானதானதால் அந்த அலுவலகமும் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த இரு தலைமை அலுவலகமும் சிஜிஓ வளாகத்தில் இயங்கி வருகின்றன.