கர்நாடகாவில் 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 பேருக்கு கொரோனா! – பெற்றோர் அதிர்ச்சி
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அங்கு 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. தெலங்கானா, தமிழகம் போல கர்நாடகாவிலும் 10ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எதிர்ப்பையும் மீறி 10ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.