×

புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக உயர்வு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 5,66,840லிருந்து 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,47,979 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,400 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . மகாராஷ்டிராவில் 1,74,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 5,66,840லிருந்து 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,47,979 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,400 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . மகாராஷ்டிராவில் 1,74,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 90,911 ஆக ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,855 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 739 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு பலியான எண்ணிக்கை 11 ஆக உள்ளது.