×

120 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை : தெலங்கானாவில் பரபரப்பு!

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிக்ஷபதி. கோடை காலம் என்பதால் நீர் இல்லாததால் விவசாயம் பார்க்க தனது நிலத்தில் 2 ஆழ்துளை கிணறுகளை அவர் தோண்டியுள்ளார். ஆனாலும் நீர் வரவில்லை. இதனால் மூன்றாவதாக ஒரு கிணறு தோண்ட அங்கிருந்து தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏற்கனவே திறந்த 2 கிணறுகளை பிக்ஷபதி அப்படியே விட்டுவிட்டார். இந்நிலையில் பிக்ஷபதியின் மைத்துனர் கோவர்தனின் 3 வயது மகன் சாய்வர்தன் பிக்ஷபதி வீட்டிக்கு வந்துள்ளார்.
 

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிக்ஷபதி. கோடை காலம் என்பதால் நீர் இல்லாததால் விவசாயம் பார்க்க தனது நிலத்தில் 2 ஆழ்துளை கிணறுகளை அவர் தோண்டியுள்ளார். ஆனாலும் நீர் வரவில்லை. இதனால் மூன்றாவதாக ஒரு கிணறு தோண்ட அங்கிருந்து தண்ணீர் வந்துள்ளது. இதனால் ஏற்கனவே திறந்த 2 கிணறுகளை பிக்ஷபதி அப்படியே விட்டுவிட்டார்.

இந்நிலையில் பிக்ஷபதியின் மைத்துனர் கோவர்தனின் 3 வயது மகன் சாய்வர்தன் பிக்ஷபதி வீட்டிக்கு வந்துள்ளார். குழந்தை விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்த நிலையில் தவறி திறந்துவைக்கபட்ட 120 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இதை அறிந்த உறவினர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், தகவலறிந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். முதலில் 20 அடி ஆழத்தில் இருந்த சிறுவன் தற்போது இன்னும் ஆழத்திற்கு சென்றதாக தெரிகிறது. சிறுவனை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.