×

புருசனை டைவர்ஸ் செய்துவிட்டு மாமனாருடன் திருமணம்: அதற்கு இளம்பெண் சொன்ன காரணத்தால் இளைஞர் அதிர்ச்சி

உருகி உருகி காதலித்து வந்த அந்த இளைஞரும் இளம்பெண்ணும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து குடித்தனம் நடத்திய சில நாட்களிலேயே காதலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக தன்னை உருகி உருகி காதலித்து வந்த காதலி திடீரென்று திருமணத்திற்கு பின்னர் மனம் மாறியது ஏன்? திடீரென்று தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் தன்னை வெறுப்பது ஏன்? என்பது புரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அந்த இளைஞர்.
 

உருகி உருகி காதலித்து வந்த அந்த இளைஞரும் இளம்பெண்ணும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து குடித்தனம் நடத்திய சில நாட்களிலேயே காதலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனை நாட்களாக தன்னை உருகி உருகி காதலித்து வந்த காதலி திடீரென்று திருமணத்திற்கு பின்னர் மனம் மாறியது ஏன்? திடீரென்று தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் தன்னை வெறுப்பது ஏன்? என்பது புரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அந்த இளைஞர். இதற்கிடையில் இருவருக்கு இடையேயும் மனக்கசப்பு அதிகமானதை அடுத்து இருவரும் முறைப்படி பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்து விவாகரத்து கோரி விவகாரத்து, பெற்று விட்டனர்.

இந்த நிலையில் திடீரென்று இளைஞரின் தந்தை காணாமல் போயிருக்கிறார். எங்கு தேடியும் தந்தை கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் அந்த இளைஞரின் தந்தையை தொடர்ந்து தேடிவந்த நிலையில், அவர் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நேரில் சென்று விசாரித்த போது தான், அந்த இளைஞரின் தந்தையுடன் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தது அந்த இளைஞரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. மருமகளே மாமனாரை திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிந்து போலீசார் அதிர்ந்தனர்.

ஒரே வீட்டுக்குள் இருந்தபோது மாமனாருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதனால்தான் அவர் கணவனுடன் சரிவர குடித்தனம் நடத்தாமல் இருந்து வந்துள்ளார் என்று தெரியவந்திருக்கிறது.

ஒருகட்டத்தில் ஒரே வீட்டிற்குள் ரகசியமாக உல்லாசமாக இருப்பதை விரும்பாதவர்கள், எங்காவது சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளார்கள். அந்த திட்டத்தின்படி தான் முதலில் அப்பெண், கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். பின்னர் மாமனாரை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தனியே வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த விவரங்களை கணவனுக்கும் அவரது உறவினர்களுக்கும் போலீசார் தெரிவித்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்கள் இப்படி முறையற்ற உறவை வைத்துக் கொள்வதற்காகத்தான் தன்னிடம் விவகாரத்து பெற்றாரா என்று ஆத்திரப்பட்டுள்ளார். இது அநியாயம் காதலித்த தனக்கு செய்த துரோகம், திருமணம் என்கிற பெயரில் தனக்கு செய்த துரோகம் என்று ஆத்திரப்பட்ட அந்த இளைஞர் அவர்கள் இருவரையும் பிரித்து வைக்க வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தபோது, என்னால் கணவருடன் இனி வாழ முடியாது. மாமனாருடன் தான் வாழ்வேன். அவர்தான் எனக்கு இனிமேல் கணவர். அவருடன் சந்தோசமாக குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அவருடன் வாழ்ந்தால் தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.

இதனால் போலீசார் அவரை வற்புறுத்த முடியாத நிலை இருக்கிறது. ஆனாலும் உறவினர்களும், இளைஞரும் எப்படியாவது அவர்களை பிரிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றனர். உத்திரபிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியில் தான் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.