×

பேத்தி வயிறு ஏன் பெருசா இருக்குது…ஆன்லைன் வகுப்பில் அண்ணனும் தங்கையும் அடித்த கூத்து அம்பலம்

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் என்பதால் எல்லா மாணவ, மாணவிகளும் ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வசதியை சில மாணவ, மாணவிகள் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இணையதளத்தில் எதேச்சையாக வந்துவிழும் ஆபாச படங்களும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பி விடுகின்றன. இதற்கு அடிமையாகி பாடம் படிக்காமல் தேவையில்லாத வீடியோக்களை பார்த்தே வாழ்க்கையை பாழடித்துக்கொண்டிருக்கின்றனர் பலரும். பெற்றோர்தான் இதை
 

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்புகள் என்பதால் எல்லா மாணவ, மாணவிகளும் ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வசதியை சில மாணவ, மாணவிகள் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இணையதளத்தில் எதேச்சையாக வந்துவிழும் ஆபாச படங்களும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பி விடுகின்றன. இதற்கு அடிமையாகி பாடம் படிக்காமல் தேவையில்லாத வீடியோக்களை பார்த்தே வாழ்க்கையை பாழடித்துக்கொண்டிருக்கின்றனர் பலரும். பெற்றோர்தான் இதை கவனிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் படிப்பதையும், செல்போன்களின் என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்காத பெற்றோருக்கு நேர்ந்த கதிதான் எல்லோருக்கும் பாடமாக அமைந்திருக்கிறது.

ராஜஸ்தானில் 15வயது அக்காவும், 13 வயசு தம்பியும் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தே படித்து வந்துள்ளனர். அப்போது செல்போனில் வந்த ஆபாச படங்களை சேர்ந்தே பார்த்துள்ளனர். அதன்பின்னர் தொடர்ந்து அந்த படங்களை பார்த்து வந்த அவர்கள், அப்படங்களில் உள்ளது மாதிரியே நிஜத்திலும் செய்து பார்த்துள்ளனர். அண்ணன் -தங்கை என்ற நினைப்பே இல்லாமல் அந்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ஒருநாள் அந்த சிறுமியின் வயிற்றை பார்த்த பாட்டி, பேத்தி வயிறு ஏன் பெருசா இருக்குது? என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் பெற்றோரும் கவனித்திருக்கிறார்கள். மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தால் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை அடித்து கேட்டபோது, வயிற்றில் வளரும் குழந்தைக்கு தம்பிதான் காரணம் என்று சொல்லி மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.