×

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்து கருவை கலைத்த கணவன்: விஜயாப்புரத்தை உலுக்கி எடுத்த சம்பவம்

மூன்றாவதாக பிறக்கப்போகும் குழந்தையும் பெண் குழந்தைதான் என்று தெரியவந்ததால், கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கத்தியால் கிழித்து கருவை கலைத்த கணவனின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் விஜயாப்புரா மக்கள். கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் அரவிந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்த அரவிந்துக்கு, இரண்டு பெண் குழந்தைகள் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், விஜயலட்சும் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த முறை
 

மூன்றாவதாக பிறக்கப்போகும் குழந்தையும் பெண் குழந்தைதான் என்று தெரியவந்ததால், கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கத்தியால் கிழித்து கருவை கலைத்த கணவனின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் விஜயாப்புரா மக்கள்.

கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் அரவிந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்த அரவிந்துக்கு, இரண்டு பெண் குழந்தைகள் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், விஜயலட்சும் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த முறை தனக்கு நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று எல்லோரிடமும் சொல்லி வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு விஜயலட்சுமியின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்கிற சந்தேகம் இருந்துள்ளது.

இதனால் விஜயலட்சுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் விஜயலட்சுமியின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தைதான் என்று தெரியவந்தது.

மூன்றாவதாக பிறக்கப்போவதும் பெண் குழந்தைதான் என்று தெரியவந்ததால், அந்த கருவை கலைத்துவிடும்படி விஜயலட்சுமியிடம் கேட்டிருக்கிறார்.

அந்த பாவத்தை செய்ய தான் தயாராக இல்லை என்று பிடிவாதமாக மறுத்துள்ளார் விஜயலட்சுமி. இதனால் ஆத்திரம் கொண்ட அரவிந்த், வலுக்கட்டாயமாக விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்துவிட முடிவெடுத்துள்ளார். அதன்படி, இரண்டு பேருடன் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்திருக்கிறார். மூன்று பேருமாக சேர்ந்து விஜயலட்சுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைத்துள்ளனர்.

இரண்டு பேர் விஜயலட்சும் சத்தம் போடாதவாரும், அவர் கை,கால்களை உதறாமல் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள, கத்தியை எடுத்த அரவிந்த், விஜயலட்சுமியின் வயிற்றை கிழித்து கருவை கலைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் விஜயலட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி ஓடவும், பயந்து போன மூன்றுபேரும் விஜயலட்சுமியை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வயிற்றை கிழித்து கருவை கலைத்த குற்றத்திற்காக மூன்று பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அதே நேரம், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது பற்றிய விபரத்தை சொன்ன ஸ்கென் செண்டரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் விஜயாப்புராத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.