×

பாஜக பொருளாளருக்கு வந்த கோபம்… கிரேட்டா தன்பெர்க்கின் பேச்சு ஆபத்தானதாம்…

டெல்லியில் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி நடிகை கங்கனா ரனாவத் அதிரவைத்திருக்கும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்போரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வருகின்றனர் பாஜகவினர். சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகை ரிஹானாவுக்கு கிரேட்டா தன்பெர்க் குரல் கொடுத்திருப்பதால் விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம்
 

டெல்லியில் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி நடிகை கங்கனா ரனாவத் அதிரவைத்திருக்கும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்போரை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வருகின்றனர் பாஜகவினர்.

சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஹாலிவுட் நடிகை ரிஹானாவுக்கு கிரேட்டா தன்பெர்க் குரல் கொடுத்திருப்பதால் விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட பாஜகவினர், ரிஹானா என்ன மதம் என்று தேடி கூகுளை அதிரவைத்துள்ளனர். அவர் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும், பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரிஹானாவை போல கிரேட்டா தன்பெர்க்கையும் பயங்கரவாதியகாக சித்தரிக்க தொடங்கிவிட்டனர்.

’’கிரேட்டா தன்பெர்க் ஒரு சூழலியல் ஆர்வலர் என்று நான் நினைத்தேன். ஆனால்,அவர் விவசாய சட்டம் பற்றி பேசுகிறார். விவசாய சட்டம் பற்றி அவருக்கு என்ன தெரியும். உலக அரங்கில் இந்தியாவை அகற்ற முயற்சி நடக்கிறது. கிரேட்டா தன்பெர்க்கின் இந்த டுவிட்டும் அதற்கு ஒரு உதாரணம்.
இடதுசாரிகள் அமைப்பில் இருந்து அவர் பேசுவது மிகவும் ஆபத்தானது’’என்று எச்சரிக்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.