×

லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்திருக்கிறார். 72 வயதாகும் லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வந்தார். அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்ததால் ராஞ்சியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மருத்துவர்கள் அவரை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில்
 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்திருக்கிறார்.

72 வயதாகும் லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வந்தார். அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்ததால் ராஞ்சியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மருத்துவர்கள் அவரை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினர்.

மூச்சுத் திணறலும் நிமோனியா காய்ச்சலும் அதிகமாக இருப்பதால் அவரை உடனே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பது தான் சரியானது என்றும் ரிம்ஸ் மருத்துவக்குழு அறிவுறுத்தியது. இதை எடுத்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ராஞ்சியில் டெல்லி கொண்டுவரப்பட்டார் லாலுபிரசாத்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலை தரும் வகையில் இருப்பதாக அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்திருக்கிறார்.