×

தீடிரென செக் போஸ்டை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள்… கண்மூடித்தனமாக சுட்டதில் 2 போலீஸ் உள்பட நால்வர் பலி!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதுகாப்புப் படையினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் நிலையில், தொடர்ந்து அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பாராமுல்லா மாவாட்டத்தில் உள்ள அரம்போரா பகுதி சோதனைச்சாவடியை திடீரென சுற்றி வளைத்தனர் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள். அப்போது கண்மூடித்தனமாக போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு
 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதுகாப்புப் படையினரும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் நிலையில், தொடர்ந்து அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று ஸ்ரீநகரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பாராமுல்லா மாவாட்டத்தில் உள்ள அரம்போரா பகுதி சோதனைச்சாவடியை திடீரென சுற்றி வளைத்தனர் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள்.

அப்போது கண்மூடித்தனமாக போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் இரண்டு பேர் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரம்போரா பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகள் தேடும் பணியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.