×

சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்த மேலும் 3 பேர் மரணம்; உயிரிழப்பு 13 ஆக உயர்வு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வந்தது. அதுமட்டுமில்லாமல், சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால் பலர் அதனை குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் சூரிமேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர். அவர்களுள் 8 பேர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சானிடைசரை கலந்து குடித்ததால் உயிரிழப்பு அதிகரிக்கும்
 

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வந்தது. அதுமட்டுமில்லாமல், சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால் பலர் அதனை குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் சூரிமேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் போதைக்காக கள்ளச்சாராயத்தில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர்.

அவர்களுள் 8 பேர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சானிடைசரை கலந்து குடித்ததால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதன் படி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சானிடைசரை குடித்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து ஏற்படும் உயிரிழப்புகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சானிடைசரை குடித்தவர்களுள் பலரின் உடல்நிலை மோசமாக நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.