×

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமல்

கொரோனா இரண்டாவது அலை பரவி பல மாநிலங்களிலும் வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க இன்று இரவு 10 மணி முதல் 22ம் தேதி காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் போபால், ஜபல்பூர், இந்தூர் ஆகிய மூன்று நகரங்களில் இரண்டு நாட்கள் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர், மராட்டி மாநிலத்திற்கு செல்லும் பேருந்து சேவையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான். முன்னதாக
 

கொரோனா இரண்டாவது அலை பரவி பல மாநிலங்களிலும் வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க இன்று இரவு 10 மணி முதல் 22ம் தேதி காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் போபால், ஜபல்பூர், இந்தூர் ஆகிய மூன்று நகரங்களில் இரண்டு நாட்கள் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மராட்டி மாநிலத்திற்கு செல்லும் பேருந்து சேவையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்.

முன்னதாக அவர், மேலும் 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கொரோனா 2வது அலை தமிழகத்தில் அதிகம் இருப்பதால் இங்கேயும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் , தமிழகத்தில் தேர்தலையும் கூட நிறுத்திவிட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.