10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை..
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1033 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் ( தொழில் பழகுநர் ) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை : ரயில்வே துறை
மொத்த பணியிடங்கள் : 1,033
கல்வித்தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்..
வயது வரம்பு : 15 முதல் 24 வரை இருக்க வேண்டும்.. ( எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி, PWD விண்ணப்பதாரர்களுக்கு தளர்வுகள் உண்டு)
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24. 05. 2022
பணியிட விவரம்:
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியின் ( மதிப்பெண் ) அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்டையில் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை: அரசு அறிவிப்பின்படி பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்..