×

“முதல்வர் வரம் கொடுத்த ‘சாமி’ சசிகலா மீதே கை வைத்த பழனிசாமி”

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரனை ஆதரித்து எம்.பி. தயாநிதி மாறன் இன்று (மார்ச் 30) குன்னூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக சொன்னது ஸ்டாலினோ, நானோ இல்லை. துணை முதல்வர் ஓபிஎஸ் தான். ஆனால், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. சசிகலாவால் முதல்வராகிவிட்டு வரம் கொடுத்த சாமி
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரனை ஆதரித்து எம்.பி. தயாநிதி மாறன் இன்று (மார்ச் 30) குன்னூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக சொன்னது ஸ்டாலினோ, நானோ இல்லை. துணை முதல்வர் ஓபிஎஸ் தான். ஆனால், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. சசிகலாவால் முதல்வராகிவிட்டு வரம் கொடுத்த சாமி மீதே கை வைத்தவர் தான் இந்த பழனிசாமி.

மக்கள் சிரமத்தை போக்க கரோனா காலத்தில் நிதி உதவி வழங்க ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஆனால், அப்போது நிதியில்லை என கூறி, பொங்கல் பண்டிகையின் போது ரூ.2,500 கொடுக்கப்பட்டது. இந்த தொகை திமுக கொடுத்த அழுத்தத்தினாலேயே கொடுக்கப்பட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உரிய காலத்தில் அனைவருக்கும் ரூ.4000 வழங்கப்படும். இத்தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல, நம் எதிர்கால தலைமுறைக்கான பாதுகாப்பு தேர்தல். தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்து நமது தமிழக மாணவர்களை நசுக்கியது மத்திய மற்றும் மாநில அரசுகள்” என்றார்.