×

ஆர்கே நகர் மாடல்… ஒரே வார்த்தையில் எடப்பாடி, ஸ்டாலினுக்கு தினகரன் செக்!

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போல தினகரன் எடப்பாடிக்கு குடைச்சலாக மாறியிருக்கிறார். ஒரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து கடும் விமர்சனம் செய்துவருகிறார். அதைச் சமாளிக்கவே எடப்பாடிக்கு நேரம் பற்றவில்லை. இச்சூழலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உச்சபட்ச தலைவலியைக் கொடுத்திருக்கிறார். கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த தினகரன், ”எடப்பாடி பழனிசாமி பொய்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறார். அவர் நமக்கு துரோகம் செய்து
 

உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்பது போல தினகரன் எடப்பாடிக்கு குடைச்சலாக மாறியிருக்கிறார். ஒரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து கடும் விமர்சனம் செய்துவருகிறார். அதைச் சமாளிக்கவே எடப்பாடிக்கு நேரம் பற்றவில்லை. இச்சூழலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உச்சபட்ச தலைவலியைக் கொடுத்திருக்கிறார். கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த தினகரன், ”எடப்பாடி பழனிசாமி பொய்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறார். அவர் நமக்கு துரோகம் செய்து விட்டார் என்று ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், நான் யார் காலிலும் விழவில்லை? ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? என்று கேட்கிறார். நான் சொல்கிறேன் அவர் பச்சோந்தி.

அமமுக அதிமுகவை கேட்பதையெல்லாம் திமுகவினர் கேட்கிறார்கள். அமமுக திமுகவை விமர்சித்து பேசுவதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அந்த இரண்டு கட்சிகளுக்கும் பேச வேறு விஷயமே இல்லை. இரண்டு கட்சிகளையும் விமர்சித்து பேசும் ஒரே தகுதி நமக்கு தான் உண்டு. நாளாக நாளாக அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஆர்கே நகரில் கொடுத்தது போல ரூ.6 ஆயிரம் ரூபாய் கூட அதிமுகவினர் கொடுப்பார்கள். எல்லா மக்களிடமும் சொல்லிவிடுங்கள். அது உங்கள் பணம்தான். ஆர்கே மக்கள் போலவே பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் கதையை முடித்து விடுங்கள்” என்றார்.