×

திமுகவே ஆச்சர்யப்படும் வகையில் அதிமுக ஊழல் – டிடிவி தினகரன்

கோவை சிங்காநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளர் செல்வாவை ஆதரித்து மசக்காளிபாளையத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், “அனைவரும் நிம்மதியாக வாழ குக்கர் சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நேர்மையான, ஊழலற்ற, நடுநிலையான சிறப்பான ஆட்சியை அமைக்க குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தீயசக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. தமிழகத்தில் உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்க குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். அமமுக கூட்டணி மக்களை மட்டுமே நம்பியுள்ளது.
 

கோவை சிங்காநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளர் செல்வாவை ஆதரித்து மசக்காளிபாளையத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன், “அனைவரும் நிம்மதியாக வாழ குக்கர் சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நேர்மையான, ஊழலற்ற, நடுநிலையான சிறப்பான ஆட்சியை அமைக்க குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தீயசக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. தமிழகத்தில் உண்மையான அம்மாவின் ஆட்சியை உருவாக்க குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். அமமுக கூட்டணி மக்களை மட்டுமே நம்பியுள்ளது. ஆட்சியாளர்கள் பணமூட்டைகளை நம்பியுள்ளனர். தமிழகத்தில் ஊழல், லஞ்ச லாவண்யத்தின் மொத்த உருவமாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

இலவச திட்டங்களை நிறைவேற்ற மாதம் ரூ.5,000 கோடி செலவாகும் அதற்கு எங்கே போவார்கள்? சட்டமன்ற தேர்தலுக்கு ஆளுங்கட்சியினர் செலவு செய்யும் பணம் மக்களின் வரிப்பணம்தான். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். தப்பித்தவறி திமுக ஆட்சி வந்தால் வீட்டுக்குள் புகுந்துவிடுவார்கள். திமுகவினரே ஆச்சர்யப்படும் வகையில் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செய்த துரோக செயலுக்கு பெயர் ராஜ தந்திரமா? பணமூட்டையை நம்பி மக்கள் இந்த தேர்தலில் ஏமாந்துவிடாதீர்கள்” எனக் கூறினார்.