×

“மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்” – விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்வதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. மேலும், அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா டெபாசிட் இழந்தது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு
 

சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்வதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. மேலும், அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா டெபாசிட் இழந்தது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்வதாக விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.