×

“இந்த தொகுதிக்கு வந்தாலே அம்மா ஞாபகமா வருது” – உடைந்து அழுத எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக எடப்பாடியும் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டிவருகின்றனர். தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவருகிறார். அந்த வகையில் ஆர்கே நகருக்குள் பிரச்சார வாகனம் நுழைந்தது. அப்போதே ஒருவித சோகத்துடனே எடப்பாடி இருந்தார். அங்கு பிரச்சாரம் செய்யும்போது
 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக எடப்பாடியும் ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டிவருகின்றனர். தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்துவருகிறார்.

அந்த வகையில் ஆர்கே நகருக்குள் பிரச்சார வாகனம் நுழைந்தது. அப்போதே ஒருவித சோகத்துடனே எடப்பாடி இருந்தார். அங்கு பிரச்சாரம் செய்யும்போது கண்ணீர் மல்க பிரச்சாரம் செய்தார். மக்களை நோக்கி பேசிய அவர், “இந்த தொகுதிக்குள் வந்தாலே அம்மாவின் நினைவு தான் வருகிறது” என்று கூறி உடைந்து அழுதுவிட்டார். அதன்பின் சாதாரணமாக பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதாவை முதல்வராக்கிய தொகுதி ஆர்கே நகர் தான். அவர் கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பிரமாண்ட வெற்றிபெற்றார்.