×

என் தாயை எப்படியெல்லாம் ஏசுகிறார்கள்.. நா தழுதழுக்க கண்கலங்கிய முதல்வர் பழனிசாமி!

என் தாயை எப்படியெல்லாம் திமுகவின் ஆ.ராசா பேசியிருக்கார் பாருங்கள் என சொல்லி சென்னை திருவொற்றியூர் பிரச்சாரத்தின்போது கண்கலங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சாதாரண குடும்பத்தில் உங்களைப்போல் வளர்ந்தவன் நான். ஒரு சாதரண முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டியிருக்கிறது. எப்படியெல்லாம் கீழ்தரமாக பேசுகிறார்கள் என்பதை நீங்களே எண்ணி பாருங்கள். தாய்மார்களை இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கவேண்டும். முதலமைச்சரின் தாயையே இப்படி பேசுகிறார்களே, நாளை ஆட்சிக்கு வந்தால் என்ன
 

என் தாயை எப்படியெல்லாம் திமுகவின் ஆ.ராசா பேசியிருக்கார் பாருங்கள் என சொல்லி சென்னை திருவொற்றியூர் பிரச்சாரத்தின்போது கண்கலங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சாதாரண குடும்பத்தில் உங்களைப்போல் வளர்ந்தவன் நான். ஒரு சாதரண முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டியிருக்கிறது. எப்படியெல்லாம் கீழ்தரமாக பேசுகிறார்கள் என்பதை நீங்களே எண்ணி பாருங்கள். தாய்மார்களை இழிவுபடுத்தி பேசுபவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கவேண்டும்.

முதலமைச்சரின் தாயையே இப்படி பேசுகிறார்களே, நாளை ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? பெண்களின் நிலை என்னவாகும்? தாய்மார்களின் நிலைமை என்னவாகும்? என் தாய் கிராம பெண்மணி, இரவு பகல் பாராமல் என்னை வளர்த்து ஆளாக்கியுள்ளார். தற்போது அவர் இறந்துவிட்டார். நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்து இந்த இடத்துக்கு வந்தவன். ஏழையானாலும் பணக்காரனாலும் தாய் தான் உயர்ந்த ஸ்தானம். தாயை யார் இழிவாக பேசினாலும் ஆண்டவன் அதற்கெல்லாம் உரிய தண்டனையை வழங்குவார்” எனக் கூறினார்.