×

கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கணவர் இறந்த வேதனையில், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கீழ்புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவால் புவனேஸ்வரி, மிகுந்த
 

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கணவர் இறந்த வேதனையில், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கீழ்புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவால் புவனேஸ்வரி, மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் வாழ்வில் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.