×

திருவாடானை அருகே ஊரணியில் மூழ்கி தந்தை, மகள் பலி!

ராமநாதபுரம் திருவாடானை அருகே ஊரணியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த நிலமகிழமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (39). கூலி தொழிலாளி. இவரது 4 வயது மகள் யாஷினி (4). இந்த நிலையில், நேற்று ஜோதிமணி, கிராமத்தில் உள்ள ஊருணிக்கு குழந்தையுடன் குளிக்க சென்றார். தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிறுமி ஆழமான பகுதியில் சிக்கி தவித்தார். இதனால் அவரை காப்பற்ற ஜோதிமணி முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கினார். இதனை
 

ராமநாதபுரம்

திருவாடானை அருகே ஊரணியில் மூழ்கி தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த நிலமகிழமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (39). கூலி தொழிலாளி. இவரது 4 வயது மகள் யாஷினி (4). இந்த நிலையில், நேற்று ஜோதிமணி, கிராமத்தில் உள்ள ஊருணிக்கு குழந்தையுடன் குளிக்க சென்றார்.

தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிறுமி ஆழமான பகுதியில் சிக்கி தவித்தார். இதனால் அவரை காப்பற்ற ஜோதிமணி முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கினார். இதனை கண்டு, அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஊரணியில் இறங்கி தேடியபோது, தந்தை – மகள் இருவரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர்.

இதனை அடுத்து, திருவாடானை போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.