×

மண்டபம் அருகே தோட்டத்தில் பதுக்கிய 175 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 175 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக, மாவட்ட எஸ.பி., கார்த்திக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி தீபக் ஸ்கவாச் தலைமையில் மண்டபம் போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான
 

ராமநாதபுரம்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 175 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக, மாவட்ட எஸ.பி., கார்த்திக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டிஎஸ்பி தீபக் ஸ்கவாச் தலைமையில் மண்டபம் போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மூட்டைகளில் சோதனையிட்டபோது, அதில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 7 மூட்டைகளில் இருந்த 175 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல்அட்டைகளையும், 10-க்கும் மேற்பட்ட பேரல்களில் ஊர வைத்திருந்த கடல் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக மண்டபம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கடல் அட்டைகளை பதுக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.