×

சீர்காழி அருகே ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை கொள்ளிடம் அருகே ஆற்றில் மீன்பிடித்த இளைஞர் தண்ணீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த கூத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கணேசன். இவர் அங்குள்ள பழவனாற்றில் தூண்டில் போட்டு, மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்த கணேசன், நீரில் மூழ்கி மாயமாகினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி
 

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே ஆற்றில் மீன்பிடித்த இளைஞர் தண்ணீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த கூத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கணேசன். இவர் அங்குள்ள பழவனாற்றில் தூண்டில் போட்டு, மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்த கணேசன், நீரில் மூழ்கி மாயமாகினார்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின்பு அவர்கள், கணேசனை சடலமாக மீட்டனர்.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணேசன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.