×

பெரியகுளம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், இருவர் பலி!

தேனி தேனி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேக்கமலையாண்டி (65). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கோட்டையம்மாள். இவர் அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவராக உள்ளனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேக்கமலையாண்டி, அதே பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருடன் பெரியகுளத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
 

தேனி

தேனி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேக்கமலையாண்டி (65). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கோட்டையம்மாள். இவர் அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி தலைவராக உள்ளனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தேக்கமலையாண்டி, அதே பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருடன் பெரியகுளத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

தேவதானப்பட்டி அருகே சென்றபோது, அவரது வாகனம் மீது எதிரே தேனியில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற கார் மோதியது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டத்தில் படுகாயமடைந்த தேக்கமலையாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துக்கருப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முத்துக்கருப்பன் உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல்லை சேர்ந்த கார் ஓட்டுநர் பாலகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.