×

டெல்லி வாகன விபத்தில, தமிழக ராணுவ வீரர் மரணம்!

தேனி டெல்லியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன் (33). இவர் புதுடெல்லி ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ(8), யுகாசினி (3) என்ற 2 மகள்களும் உள்ளனர். ராணுவ வீரர் பிரபாகரன், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பணி
 

தேனி

டெல்லியில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரபாகரன் (33). இவர் புதுடெல்லி ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ(8), யுகாசினி (3) என்ற 2 மகள்களும் உள்ளனர். ராணுவ வீரர் பிரபாகரன், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, வாகனம் விபத்தில் சிக்கியதில் பிரபாகரன் உயிரிழந்தார். தகவல் அறிந்த டெல்லி காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, நேற்று மதியம் இறந்த ராணுவ வீரர் பிரபாகரன் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கம்பம் நகருக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் நிலையில், பின்னர் கம்பத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.