×

பல்லடம் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலி!

திருப்பூர் பல்லடம் அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சி கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (52). கூலி தொழிலாளி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல்
 

திருப்பூர்

பல்லடம் அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சி கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (52). கூலி தொழிலாளி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அவிநாசிபாளையம் போலீசார் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து நாச்சிமுத்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.