×

குடும்ப தகராறில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள அரசம்பட்டு காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருக்கு ஆர்த்தி(17), வரதராஜன் (15) என இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஆர்த்தி, தனது குடும்பத்தினருடன் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வரதராஜனுக்கும், ஆர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி, தோட்டத்தில் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
 

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே சகோதரனுடன் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள அரசம்பட்டு காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருக்கு ஆர்த்தி(17), வரதராஜன் (15) என இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஆர்த்தி, தனது குடும்பத்தினருடன் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, வரதராஜனுக்கும், ஆர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி, தோட்டத்தில் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த ஆர்த்தியை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை ஆர்த்தி உயிரிழந்தார். தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.