×

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பலி!

அரியலூர் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேரந்தவர் ராமமூர்த்தி (60). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டை பார்ப்பதற்காக ராமமூர்த்தி, தனது மனைவி, 2 மகள்கள் உள்ளிட்டோருடன் காரில் அரியலூருக்கு வந்து கொண்டிருந்தார். கீழப்பழுவூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சென்றபோது,
 

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேரந்தவர் ராமமூர்த்தி (60). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில், சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டை பார்ப்பதற்காக ராமமூர்த்தி, தனது மனைவி, 2 மகள்கள் உள்ளிட்டோருடன் காரில் அரியலூருக்கு வந்து கொண்டிருந்தார். கீழப்பழுவூர் அருகேயுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில், ராமமூர்த்தி, அவரது மூத்த மகள் நாகவள்ளி (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இளைய மகள் நாகலட்சுமி (35), 3 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நாகலட்சுமி உயிரிழந்தார். இதனையடுத்து, குழந்தைகள் உள்பட 5 பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின், தஞ்சை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.