×

கடலூர் அருகே பெண் விஏஓ தூக்கிட்டு தற்கொலை!

 

கடலூர் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.  இவரது மகள் ஜெயஸ்ரீ(35). இவர் வடக்கு சேப்ளாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். ஜெயஸ்ரீக்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூர் கமலாபுரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே, ஜெயஸ்ரீ வேலை காரணமாக தந்தை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். அப்போது, அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஜெயஸ்ரீயின் தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.