×

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் பலி!

விருதுநகர் சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் முத்துரிஷி(20). இவர் நேற்று மாலை தேவர்குளத்தில் இருந்து சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். சிவகாசி அருகே சென்றபோது, முத்துரிஷி வாகனத்தின் மீது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துரிஷி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த
 

விருதுநகர்

சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் முத்துரிஷி(20). இவர் நேற்று மாலை தேவர்குளத்தில் இருந்து சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். சிவகாசி அருகே சென்றபோது, முத்துரிஷி வாகனத்தின் மீது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த முத்துரிஷி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சடலத்தை கைப்பறி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கீழதாயல்பட்டியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் ராஜேஸ்வரனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.