×

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

விருதுநகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள தனியார் நிறுவத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணேசன் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ராஜபாளையம் கடம்பன்குளம் பகுதி அருகே சென்றபோது, கணேசன் வாகனத்தின் மீது, எதிரே வந்த அரசு விரைவுப்
 

விருதுநகர்

ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள தனியார் நிறுவத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணேசன் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

ராஜபாளையம் கடம்பன்குளம் பகுதி அருகே சென்றபோது, கணேசன் வாகனத்தின் மீது, எதிரே வந்த அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஒடினார்.

தகவல் அறிந்த ராஜபாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.