×

கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (22). இவருக்கு, வீரபாபு என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், வீரபாபு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிந்தார். கணவர் இறப்பால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி, வாழ்வை முடித்துகொள்ள தீர்மானித்தார். இதனையடுத்து, நேற்று
 

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (22). இவருக்கு, வீரபாபு என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், வீரபாபு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிந்தார்.

கணவர் இறப்பால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி, வாழ்வை முடித்துகொள்ள தீர்மானித்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் மம்சாபுரம் போலீசார் காயத்திரியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக உடலை ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காயத்ரியின் தாயார் பராசக்தி அளித்த புகாரின் பேரில், பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.